Thursday, July 14, 2011

Coffee with கவிதை.......

கண்ணாடியில் உன்னை ரசித்துக்கொண்டிருகிறாய்,
கண்ணாடி உன்னை ரசித்துக்கொண்டிருக்கிறது.


உன் வரவுக்காக 
பூக்களைத் தூவுகின்றன மரங்கள்,
நீயோ பூக்கள் மிதிபடாமல் முயல்குட்டி போல்
தாவித்தாவி செல்கிறாய்...


மைத்தூவும் என் பேனா
உன் பெயரை எழுதும் பொது மட்டும்,
காதலைத் தூவுகிறது.

என் அறை முழுதும் நிரம்பிக் கிடக்கின்றன,
காற்றும் அதற்கு மேலான உன் காதலும்.

பசி தாகம் சகிக்கலாம்,
உன் பேசா மௌனம் மட்டும் வேண்டாம்.