வேண்டாதவர்களைப் போல் பாசாங்கு செய்தாலும்
மீண்டும் மீண்டும் சந்திக்க விளைகின்றன இதழ்கள்
எவ்வளவு வேண்டுமானாலும் மாத முதல் தேதியிலே
கேட்டுவிடு என்கிறாய்,.........
மொத்தத் தேவைக்கு முதல் தேதி சரி,என்
முத்தத் தேவைக்கு என்ன வழி?
Sunday, October 24, 2010
Thursday, September 16, 2010
Tuesday, August 31, 2010
தமிழ் - ஆங்கிலம் அகராதி இணைய இணைப்பு
தமிழிருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழ் சொற்கள் கற்றுக் கொள்ள இந்த இணைய இணைப்பை சொடுக்குக...
Monday, August 30, 2010
டைரி கிறுக்கல்கள் for my nuts:)
கனவின் நிஜம்
"காண்பதெல்லாம் கனவென்றால்
நடப்பதெல்லாம் நிஜமென்று என்ன நிச்சயம்?"
"காற்றுப் புகாத ஓட்டினுள் உயிர் புகுந்த மர்மம்
எனக்குள் நீ புகுந்தது என்னை அறியாமலேயே"
"மனதைப் பூட்டிவைத்துக் கொள்கிறாய்
உன் மௌனம் எனும்
சாவி திறந்து கட்டியது
உன்னுளிருக்கும் என்னை"
"எனக்குப் பிடித்த கவிதை நீ
உன்னைப் படித்த ரசிகன் நான்
எனக்குப் பிடித்த ஓவியம் நீ
உன்னை ரசிக்கும் கலைஞன் நான்"
என் காதலே
"புரிந்தது உன் கள்ளத்தனம் அதைக் கண்டவுடன்
உன் நாட்குறிப்பேடு முழுதும் வெற்றிடம்
என் பிறந்த நாள் குறிப்பு நீங்கலாக!!!"
"உன் ஏவுகணைப் பார்வைகளிலேயே என்
இதயம் சுக்குநூறாகிப் போகிறது , இதுபோதாமல்
அருகில்வேறு நெருங்கி அமர்ந்து இன்னும்
என்னைக் கூடுதலாக இம்சித்து கொல்லவேண்டுமா?"
"தயவு செய்து சத்தமாக பேசாதே!
அங்கே பார் சமயம் பார்த்து காத்திருந்த காற்று
உன் பேச்சுக்களை எந்தன் காதலை
களவாடிக் கொண்டு ஓடிகொண்டிருகின்றன"
மயிலிறகே
"ஆசை ஆசையாய்
மயிலிறகு வேண்டுமென்று கேட்டாய்
எனக்கு அழுகை அழுகையாய் வருகிறது
மயிலே என்னிடம் மயிலிறகு கேட்கிறதென்று"
"புத்தகப் பைத்தியம்தான் நான்
நீ புன்னகைத்துவிட்டுப் போனபின்
புத்தகங்களை பைத்தியமாக்கிக் கொண்டிருக்கிறேன்"
"பொதுவாக கவிதைகள் எழுதுவதில் எனக்கு....
(உடல் முழுவதும் ஒவ்வொரு செல்லிலும் ஊடுருவிக்
குடியேறிய உன் காதலை வெற்றுக்
காகிதத்தில் மைத்துளிகளாக விரவுவதில்)
......உடன்பாடில்லை!!!"
"என் எண்ணங்கள் யாவும்
எழுத்துக்களாகவே கரைந்துவிடுகின்றன
உன் முன்னே பேசும் போது,
சொற்கள் குறைப்பட்டுப்போகின்றன."
"காண்பதெல்லாம் கனவென்றால்
நடப்பதெல்லாம் நிஜமென்று என்ன நிச்சயம்?"
"காற்றுப் புகாத ஓட்டினுள் உயிர் புகுந்த மர்மம்
எனக்குள் நீ புகுந்தது என்னை அறியாமலேயே"
"மனதைப் பூட்டிவைத்துக் கொள்கிறாய்
உன் மௌனம் எனும்
சாவி திறந்து கட்டியது
உன்னுளிருக்கும் என்னை"
"எனக்குப் பிடித்த கவிதை நீ
உன்னைப் படித்த ரசிகன் நான்
எனக்குப் பிடித்த ஓவியம் நீ
உன்னை ரசிக்கும் கலைஞன் நான்"
என் காதலே
"புரிந்தது உன் கள்ளத்தனம் அதைக் கண்டவுடன்
உன் நாட்குறிப்பேடு முழுதும் வெற்றிடம்
என் பிறந்த நாள் குறிப்பு நீங்கலாக!!!"
"உன் ஏவுகணைப் பார்வைகளிலேயே என்
இதயம் சுக்குநூறாகிப் போகிறது , இதுபோதாமல்
அருகில்வேறு நெருங்கி அமர்ந்து இன்னும்
என்னைக் கூடுதலாக இம்சித்து கொல்லவேண்டுமா?"
"தயவு செய்து சத்தமாக பேசாதே!
அங்கே பார் சமயம் பார்த்து காத்திருந்த காற்று
உன் பேச்சுக்களை எந்தன் காதலை
களவாடிக் கொண்டு ஓடிகொண்டிருகின்றன"
மயிலிறகே
"ஆசை ஆசையாய்
மயிலிறகு வேண்டுமென்று கேட்டாய்
எனக்கு அழுகை அழுகையாய் வருகிறது
மயிலே என்னிடம் மயிலிறகு கேட்கிறதென்று"
"புத்தகப் பைத்தியம்தான் நான்
நீ புன்னகைத்துவிட்டுப் போனபின்
புத்தகங்களை பைத்தியமாக்கிக் கொண்டிருக்கிறேன்"
"பொதுவாக கவிதைகள் எழுதுவதில் எனக்கு....
(உடல் முழுவதும் ஒவ்வொரு செல்லிலும் ஊடுருவிக்
குடியேறிய உன் காதலை வெற்றுக்
காகிதத்தில் மைத்துளிகளாக விரவுவதில்)
......உடன்பாடில்லை!!!"
"என் எண்ணங்கள் யாவும்
எழுத்துக்களாகவே கரைந்துவிடுகின்றன
உன் முன்னே பேசும் போது,
சொற்கள் குறைப்பட்டுப்போகின்றன."
நிஜமான ஒரு கனவு !!!
நான் நடை பயின்ற உன்னதமான இரு தருணங்கள்......
பத்து மாதங்களில் தந்தையுடன்,
இருபத்திரண்டு வயதில் உன்னுடன்!!!
அவள் கைகள் கோர்த்து நடந்த அந்த சாலை ஏன் வெகு சீக்கிரம் முடிந்து போனதோ......?
வரவுக்காக காத்திருந்தும் வராத பேருந்துகள் என்னை அவளிடமிருந்து கடத்திச் செல்லவே வந்து வந்து போயின....
அவள் ஸ்பரிசம் தீண்டிய அந்த நிமிடங்கள் என் மனதில் அழகான காதலை மட்டுமே வாரி வழங்கிக்கொண்டிருந்தன.....
ஒரு சபலமோ சஞ்சலமோ இல்லாத ஒரு அழகான உணர்வை உன்னிடம் மட்டுமே உணர்ந்தேன்....
நன்றி! யாருக்கு சொல்ல, என் பிரியமானவளின் காதலுக்காக நன்றி.........
வரவுக்காக காத்திருந்தும் வராத பேருந்துகள் என்னை அவளிடமிருந்து கடத்திச் செல்லவே வந்து வந்து போயின....
அவள் ஸ்பரிசம் தீண்டிய அந்த நிமிடங்கள் என் மனதில் அழகான காதலை மட்டுமே வாரி வழங்கிக்கொண்டிருந்தன.....
ஒரு சபலமோ சஞ்சலமோ இல்லாத ஒரு அழகான உணர்வை உன்னிடம் மட்டுமே உணர்ந்தேன்....
நன்றி! யாருக்கு சொல்ல, என் பிரியமானவளின் காதலுக்காக நன்றி.........
Subscribe to:
Posts (Atom)