Saturday, October 1, 2011

இன்னும் நிறைய கவிதை கவிதை

‎"நல்லதை விரும்பினத்தான் கெட்டதா நடக்குது...........
கஷ்டத்த காதலிச்சா நல்லது பொறாமப் பட்டு என்கிட்டே ஓடி வருமா???"



‎"தோற்றுக் கொண்டே இருந்தாலும் நான் என்
இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டேதான் இருக்கிறேன்"



"இல்லாத முகவரியைக் காட்டி வழி கேட்டேன்; முறைத்தாய்.
அப்போ இதுதான் சரியான முகவரி;
வர்றியா உங்க அத்தைய பாக்க என் வீட்டுக்கு"



எத்தனைப் பேனாக்களில் எழுதினாலும் 
உன் பெயர் மட்டும் கவிதையாகி விடுகிறது....
#என்னலாம் பொய் சொல்ல வேண்டி இருக்கு


‎"ஊடல் இருக்கத்தான் வேண்டும்

உனக்கும் எனக்கும்..........ஆனால்

என் உரிமையே பறிக்கப் பட்டால் எங்கே போவேன்?"

#ஆண்கள் உரிமைநலச்சங்கம்





‎"கவிதை பழகினேன்;

கவிதைகள் படித்தேன்;

கவிஞன் ஆனேன், ஆனால் உனக்குத் தெரியாது என்

க"விதை"களுக்கு "விதை"கள் தூவியது நீதானென்று"





‎"கவிதை பிடிக்கிறது இப்போதெல்லாம்

உனக்கு கவிதைகள் படிக்கப் பிடிக்கும்

என நான் அறிந்ததிலிருந்து"





‎"கொலை கூட குத்தமில்லை;

தனிமை மட்டும் வேண்டாம்;

கொன்று விடுப் போ பெண்ணே.





‎"நண்பர்கள் வட்டத்தில் என்ன சாதியென்று அறியவிளைந்ததில்லை. 
கல்யாண பத்திரிக்கையில் மட்டும் யாரும் கேக்காமல் அறிவிக்கப் படுகிறது"


இன்னும் குழந்தை தொழிலாளிகளைப் பார்கிறேன்
சமச்சீர் கல்வி - அர்த்தம் புரிய வில்லை எனக்கு



நிசப்தம் சப்தத்தை விட சத்தமாக கேக்கிறது..........

சாலை விபத்தில் யாரும் உதவிடாமல்

ஊசலாடி ஒரு உயிர் பிரிந்த போது.





யாரும் உதவிடாத அவளின் நிர்வாணத்திற்கு,

இரவு இருள் என்னும் ஆடையைத் தந்தது.



அருகிலிருந்தும்
பேசா உன் மௌனம் என்னை
இந்த பிரபஞ்சத்தையும் விட்டு
தூர எறிந்தது போல் இருக்கிறது,,



பைத்தியம் போல் அலைந்திருக்கிறேன்
அது காற்றை விட அதிகமாக
விரவியிருப்பதை அறியாமல்.....



உன் பிரிவு காய்ச்சல் அளிக்கிறது
சந்திப்போ இன்னும் என்னை உறைய வைக்கிறது
எப்போது உயிர்விப்பாய் என்னை.



வானம் பார்த்த பூமி என் மடிக்கணினி........
மழைத்துளி உன் குறுந்தகவல்
பாமரனைப் போல் காத்திருக்கிறேன் நான்
வெறுமையே மிச்சம்?!?



‎"மரங்கள் வெட்ட பலபல காரணங்கள்,
இங்கோ வெட்டபட்டன இரு புளியமரங்கள்....
அவை புளியமரங்கள் என்ற ஒரே காரணத்துக்காக
வேலிக்குள் முளைத்தன என்ற தவறுக்காக"






என்னைப் பிரியும் முன்."

No comments:

Post a Comment