Friday, March 9, 2012

என் முதல் முறை விமானப் பயணம்! கிலியூட்டும் அனுபவம்.





     டெல்லியில் ஒரு வேலை வந்தது. அதை முடிக்க நம்மள விட்டா ஆள் கிடையாதுன்னு போயிட்டு வா ராசான்னு கம்பெனில அனுப்பி வச்சாய்ங்க. டிக்கெட் வந்து சேர்ந்தது. திங்கக் கிழமை காலை 06:35க்கு ஃப்ளைட் டைமிங். பெங்களூர் டூ டெல்லி. ஸ்பைஸ் ஜெட்லருந்து மெசேஜ் வந்தது. “டெய்லி நிறைய பேரு எங்க பஸ்ல போறதால ஓவர் கிரவ்டா இருக்கும். ஆதால 150நிமிஷங்கள் முன்னாடியே வந்துருங்க. பஸ் கிளம்புறதுக்கு 45நிமிஷம் முன்னாடியே வந்துரணும்”ன்னு கடுப்ஸ் ஏத்தினானுக. அடப்பாவி மக்கா ஒரு பிளைட் பிடிக்க இரண்டு மணி நேரம் முன்னாடியே வந்து உக்காரணுமா. உலக கொடுமையேன்னு நடுராத்திரி 3.00 மணிக்கு அலாரம் வச்சு கிளம்பினேன். 4 மணிக்கு கேப் வரச்சொன்னேன். அவன் 4.45க்கு லேட்டா வந்து டெர்ரர் என்ட்ரி குடுத்தான். அய்யா நீதான் எனக்கு கடவுள் மாதிரி இப்போ. நான் மட்டும் ஃப்ளைட் இன்னிக்கு ஏறலேன்னா என் பாஸூ அவரு ஹோண்டா சிட்டிய எம்மேல ஏத்திக் கொன்னுருவாறு உள் மனசு படபடத்தது.
     அஞ்சரை மணிக்கு ஏர்போர்ட் கொண்டுவந்து விட்டான் புண்ணியவான். ஏங்க ஆரப்பாளையம் பஸ் எங்க நிக்கும்ன்னு கேக்குறாப்புல ஸ்பைஸ் ஜெட் எங்கன்னு கேட்டு முழிச்சிட்டு இருந்தேன். அப்புறம் ஒரு வழியா அவிய்ங்க கவுண்டருக்குப் போயி டிக்கெட் காமிச்சு என் பொட்டிய ஒரு பக்கம் தள்ளி விட்டேன். கைல ஒரு பேக்கோட போர்டிங்க் பாஸ் வாங்கி உள்ள போனேன். முதல் கட்டம் முடிஞ்சது.
     இரண்டாம் கட்டம். இப்போ செக்யூரிட்டி செக்கிங். ஒரு ட்ரே குடுத்தாணுக. இது எதுக்கு ஃப்ளைட்டுக்குள்ள சாப்பாட்டுக்கான்னு நினைச்சேன். அவனவன் கைல, பாக்கெட்ல இருக்குற மொபைல்,லேப்டாப், பர்ஸ்ன்னு எடுத்து வச்சு ஒரு கன்வேயர்ல தட்டி விட்டானுக. இப்போ என் டெர்ம். எல்லாத்தையும் ட்ரேல போட்டுட்டேன். வெரசா நகர்ந்து போயி 'அண்ணே எங்கிட்ட பாங்க் லோனத் தவிர ஒன்னுமில்ல'ன்னு மெட்டல் டிடெக்டர் வச்சிருக்கவன் முன்னாடி கைய்யத் தூக்கி நின்னேன். பின்னாடி நாலு பேரு என்னத் திட்டிட்டு இருந்தானுக. திரும்பிப் பாத்தா என் ட்ரேவ கன்வேயர்ல உள்ள தள்ளி விடலையாம். விடுங்க பாஸ். விடுங்க பாஸ்ன்னு நான் போயி உள்ள தள்ளிட்டு வந்தேன். எல்லாம் முடிஞ்சதும் ட்ரே வெளிய வந்தது. நான் எல்லாத்தையும் பேக்ல போட்டுட்டு பர்ஸ்ல இருந்த 258ரூவா கரக்ட்டா இருக்கான்னு சரிபார்த்தேன். என் பேக் மேல உள்ள டேக்ல “security checked okay” (செக் பண்ற அளவுக்கு இவன் வொர்த் இல்லே)ன்னு ஒரு சீல் குத்தினானுக.
     மூனாம் கட்டம். ஒரு பஸ்ஸுக்குள்ள போகச் சொன்னானுக. எதுத்தாப்புலதான் நாம போகவேண்டிய வண்டி நின்னுது. நடந்து போகக் கூடாதாம். பஸ் கொண்டு போயி ஃப்ளைட் முன்னாடி போயி விட்டது. ரெண்டு பொண்ணுங்க வர்ற கஸ்டமர எல்லாம் கும்புடுறேன் சாமி! கும்புடுறேன் சாமின்னு! சொல்லிட்டு இருந்ததுக. ஹி ஹி காமெடியா இருந்தது. சும்மா சொல்லக் கூடாது சோக்கவும் இருந்துதுக.
     ஃப்ளைட்டுக்குள்ள போயாச்சு. எல்லா சினிமால காமிக்கிற மாதிரிதான் உள்ளயும் இருந்தது. ஆஹா! நமக்கு ஜன்னல் சீட்டுடோய். குருவி படத்துல திரிஷா சீட் பெல்ட் போடத்தெரியாம முழிக்கிற மாதிரி நாம முழிக்கக் கூடாதுன்னு நானே பெல்ட்டை லாக் பண்ணிட்டேன். சரி ஓபன் பண்ணிப் பாக்கலாமேன்னு நினைச்சா அவ்வ் இப்போ அது திறக்க மாட்டேங்குது. ஒரு ஏர் கோஸ்ட் பொண்ணு ஏதோ சைகைல டான்ஸ் ஆடிட்டு இருந்தது. என்னான்னு கேட்டா ஃப்ளைட்ல ஓட்டை விழுந்துச்சுன்னா, என்ஜின் வேலை செய்யலேனா என்ன பண்ணனும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்குறதா கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன். அடப்பாவிகளா உங்க ஸ்டார்ட்டிங்கே சரியில்லேன்னு நொந்துக்கிட்டேன். அந்தப் புள்ள பெல்ட் எப்பிடி கழட்டனும்ன்னு சைகை காமிச்சிட்டு இருந்தது. என் மானம் தப்பிச்சது. செல்ஃபோன அணைக்கச் சொன்னாய்ங்க. நான் முன்னேற்பாடா ஏர்போர்ட் வரும் போதே அனச்சுட்டேன். என் அதிபுத்திசாலித்தனம் அவிங்களுக்குத் தெரிய வாய்ப்பில்ல.
     கேப்டன் வெங்கெடேச நாராயண் உங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உத்திரவாதம்ன்னு மைக்ல சொன்னாய்ங்க. ஏழுகுண்டல வாடா! வெங்கடேசா! என்ன உசுரோட ஊரு போயி சேத்துருன்னு வேண்டிக்கிட்டேன். டவுண் பஸ் ஒட்டுறாப்புல வளச்சி வளச்சி தலிவர் வண்டிய ரன் வேக்கு கொண்டுவந்தாரு. முன்னாடி ஒரு கிங்பிஷர் கிளம்பி மேல போயிட்டு இருந்தது. கரீட்டா ரன் வே நடுவால வண்டி வந்து நின்னது. நான் பிராக்கு பாத்துட்டு இருந்தேன். திடீர்ன்னு செத்த நேரத்துல என் ஈரக்குலை நடுங்குறாப்புல சும்மா ஜிவ்வுன்னு 600கிமீ வேகத்துல கிளம்புச்சு. அப்பிடியே வண்டி டக்ன்னு மேல ஏறிருச்சு. ஏண்டா இப்பிடிதான் சொல்லாம கொல்லாம வண்டியக் கிளப்பி என்னப் போல முதத்தடவ வண்டி ஏறுறவைங்களுக்கு பீதியக் கூட்டுறீங்களான்னு நினைச்சுக்கிட்டேன். மேல ஏற ஏற எனக்கு வயித்தக் கலக்குது, தலை சுத்துது, வாந்தி வார மாதிரி இருக்கு. அய்யோ எங்கூரு ராட்ணம் பரவாயில்ல. மேல ஏற ஏற கீழப் பாத்தா கூகிள் மேப் பாக்குறாப்புல ஆயிருச்சு.
     ஸ்பைஸ் புள்ளிங்க ஏதோ கேட்டுட்டு வந்ததுக. டீ, காபி விக்கிறாய்ங்கன்னு அப்புறம்தான் தெரிஞ்சிக்கிட்டேன். ஆகா இவிங்கிட்ட வாங்குறதுக்கு பர்ஸ்ல வெயிட்டேஜ் இல்லேன்னு தூங்குறாப்புல நடிச்சிட்டு இருந்தேன். பாவம் யாரு பெத்த பிள்ளைகளோ இங்க வந்து டீ யாவரம் பாக்குது. நமக்குதான் வாங்க வாக்கில்லையே நீ மூடுடான்னு மைண்ட் வாய்ஸ் கேட்டது. வண்டி வாஸ் கீப் கோயிங், கோயிங் அண்ட் கோயிங். . .
     இன்னும் அரைமணி நேரத்துல டெல்லி வந்துரும். 160மயில் இருக்குன்னு சொன்னாய்ங்க. ஒவ்வொரு வாட்டியும் டைவர் லெஃப்ட்,ரைட்டுன்னு வளையும் போது ஒரே "கிர்" பீலிங்க் தான். ஹார்ட் துடிக்குதான்னே தெரியல. கண்ணு எல்லாம் சொருகுது. வண்டி வர வர கீழ வந்துட்டே இருக்குது. நமக்கு டென்ஷன் அதிகமாயிட்டே இருக்கு. டெல்லிக்கு மேல 200அடி தூரத்துல பறந்துட்டு இருக்கோம். டைவர் யூ டர்ன் எடுக்குறாரு. லெஃப்ட், ரைட்டுன்னு அங்கயே சுத்திட்டு இருக்காரு. டக்குன்னு ஸ்லிப் ஆயி ஒரு ஜெர்க் வந்துச்சு. எனக்கே பல்ஸ் ரேட் எகிற ஆரம்பிச்சிருச்சு. ஜல்லுன்னு கீழ வந்துட்டே இருந்து டம்ன்னு ஒரு பெரிய சத்தம். குடியக் கெடுத்திட்டானுகடா! அவ்ளோதான் உங்குலசாமி அருள் உனக்கு.டெல்லில நம்ம குலசாமி அவுட் ஆஃப் கவேரேஜ்ன்னு நெனச்சேன். அப்புறம் பாத்தா வண்டி தரைல ஓடிட்டு இருக்கு. எப்படா கீழ இறக்குனீங்க? அவ்வ்!!! ஐ சேஃப்லி லாண்டேட் இன் டெல்லி. சாமி தப்பு நடந்து போச்சு. உன் பவர் டெல்லிலயும் இருக்குன்னு நெனச்சுக்கிட்டேன்.
சுபம்.
அடுத்த முறை பாராசூட்லருந்து குதிக்க நேர்ந்தா அதயும் போடுறேன்.J  

6 comments:

  1. நல்லாருக்கு மச்சி.. செம காமெடி சென்ஸ் உன் எழுத்துல.. தொடர்ந்து எழுது மச்சி...

    ReplyDelete
  2. நல்லா இருக்கு தொடர்ந்து இது போலவே எழுதவும் :))

    ReplyDelete
  3. அதுக்குதான் சன்னல் பக்கம் உக்காரக்கூடாது.

    ;-)

    நல்ல பதிவு. வித்யாசமான பார்வை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete